முத்துப்பேட்டை அருகே அரசு பள்ளி மாணவர்களின் அடைவுத்தேர்வுகளை அதிகாரிகள் ஆய்வு.

Posted January 22, 2015 by Adiraivanavil in Labels:
முத்துப்பேட்டை அடுத்த குமடித்திடல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தமிழ்நாடு அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் பள்ளிகளில் பயிழும் 3,5,8-ம் வகுப்பு மாணவர்களுக்கு அடைவுத்தேர்வு நேற்று நடத்தப்பட்டது. இதில் மாவர்களின் கல்வி தரம், நுண்ணறிவு திறன், கூர்ந்து நோக்கும் ஆற்றல், வாசிப்பு திறன் போன்றவற்றை அளவுக்கோலாக கொண்டு வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டு மாணவர்களின் திறனை சோதிக்கும் வகையில்
தேர்வு நடத்தப்பட்டது. அதனை நேற்று கள ஆய்வாளர்கள் பாஸ்கரன், தங்கபாபு ஆகியோர் ஆய்வு நடத்தினர். இதில் ஏராளமாக மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினார்கள்.





படம் செய்தி:

நிருபர் : மு.முகைதீன்பிச்சை 
முத்துப்பேட்டை


0 comment(s) to... “முத்துப்பேட்டை அருகே அரசு பள்ளி மாணவர்களின் அடைவுத்தேர்வுகளை அதிகாரிகள் ஆய்வு.”