அதிரை அருகே பறவைகள் சரணாலயமாக மாறிவரும் ஏரி-படங்கள்இணைப்பு

Posted January 23, 2015 by Adiraivanavil in Labels:
 அதிராம்பட்டினம் அருகே உள்ள மல்லிப்பட்டினம் ஏரியில் தண்ணீர் அதிக அளவில் இருப்பதால், பறவைகள் புகலிடமாக மாறியுள்ளது. இதனால் நீண்ட மூக்குடன் கூடிய வெள்ளை நிற நாரை, கொக்கு போன்ற பறவைகள் கடந்த சில மாதங்களாக அதிக அளவில் இங்கு வருவதால், பார்ப்போர் கண்ணுக்கு விருந்தளிக்கும் வகையில் சுற்றுலாத் தளம்
போல் மாறியுள்ளது.
தற்போது சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் பசுமையாகக் காட்சியளிப்பதாலும்,  பறவைகளுக்குத் தேவையான இரை கிடைக்கும் அளவுக்கு உகந்த பகுதியாக இருப்பதாலும், பறவைகள் வரத்து அதிகரித்துள்ளதாகக் கூறுகின்றனர் அப் பகுதியினர்.
பகல் நேரங்களில் இரைதேடச் செல்லும் பறவைகள், மாலை நேரங்களில் ஆயிரக்கணக்கில் கூட்டம் கூட்டமாக இங்குள்ள ஏரிக்குத் திரும்புவது அனைவரும் பார்த்து மகிழும் காட்சியாக உள்ளது.
மாலை வேளைகளில் ஏரியில் உள்ள கருவேல மரங்களில் தங்கியுள்ள பறவைகள் கூட்டம் காண்போரின் கண்களுக்கு விருந்தளிக்கின்றன.

படங்கள் மனப்பங்குளம் 
செந்தில்








0 comment(s) to... “அதிரை அருகே பறவைகள் சரணாலயமாக மாறிவரும் ஏரி-படங்கள்இணைப்பு”