முத்துப்பேட்டை பகுதியில் அறுவடை இயந்திரம் தட்டுப்பாடு:விவசாயிகள் அவதி

Posted January 20, 2015 by Adiraivanavil in Labels:

 முத்துப்பேட்டை பகுதியில் 14 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மழை, நோய் பாதிப்பு போன்றவற்றால் விவசாயிகள் பெரும் கஷ்டத்திற்கிடையே சாகுபடி பணிகளை செய்தனர். தற் பொழுது நெல் அறுவடை க்கு ஆட்களை விட இயந்திரமே பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது.இதனால் அனைத்து விவசாயிகளும் அறுவடை இயந்திரங்களை பயன்படுத்தும் சூழ்நிலை உருவாகி விட்டது. முத்துப்பேட் டை பகுதிக்கு மதுரை, ராமநாதபுரம், கோவை மற்றும் ஆந்திரா, கேரளா போன்ற இடங்களிலிருந்து இயந்திரங்கள் வரவழைக்கப் பட்டு அறுவடை நடந்து வருகிறது. தற் போது டெல்டா மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் அறுவடை பணி நடந்து வருவதால் இப்பகுதியில் அறுவடை இயந்திரங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தற்பொ ழுது பயிர் நட்டு 180 நாளுக்கு மேலாகி விட்ட தால் நெல் மணிகள் உதிர்ந்து வருகிறது. இதனால் இப் பகுதி விவசாயிகள் பெரிதும் கவலை அடைந்துள்ளனர். இது குறித்து எடையூர் பாசன சங்க நிர் வாகி கவுன்சிலர் நாகராஜன் கூறுகையில்:

பயிர்களை இந்த ஆண்டு பல கஷ்டங்கள் பட்டு நல்ல நிலைக்கு கொண்டு வந்துள்ளோம். தற்பொழுது அறுவடை இயந்திரம் கிடைக்காததால் நல்ல நிலையில் இருக்கும் நெற்கதிர்களை கரை சேர்ப்பதில் பெரும் சோதனை ஏற்பட்டுள்ளது. இதனால் இப் பகுதி விவசாயிகள் மிகுந்த வேதனைக்கு ஆளாகியுள்ளனர் என்றார்.

நன்றி தினகரன் 


0 comment(s) to... “முத்துப்பேட்டை பகுதியில் அறுவடை இயந்திரம் தட்டுப்பாடு:விவசாயிகள் அவதி”