அதிரை பகுதியில் சிறுத்தைப்புலி நடமாட்டம்? பொதுமக்கள் பீதி பரபரப்பு-படங்கள்இணைப்பு

Posted January 28, 2015 by Adiraivanavil in Labels:
 அதிராம்பட்டினம் அருகில் உள்ள ஏரிப்புறக்கரை கிராமத்தில் சிறுத்தைப்புலி நடமாட்டம் உள்ளதாக வந்த செய்தியால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர் ஏரிப்புறக்கரை கிராமம் கீழத்தோட்டம் செல்லும் சாலையில் உப்பளங்களுக்கு எதிர் புறம் உள்ள பகுதியில் மகிழங்கோட்டை கிராமம் சத்திரம் தொக்காலிக்காடு கிராமத்தைச் சேர்ந்த தங்கராஜ் மகன் செந்தில்குமார் வயது 36 என்பவர் வயலில் நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் வேலை செய்து கொண்டிருந்தார் அப்போது தமக்கு அருகில் உறுமல் சத்தம்
கேட்டதும் சுற்றுமுற்றும் பார்த்தார் பின்னர் சற்று தொலைவில் சிறுத்தைபுலி ஒன்று நிற்பதைக்கண்ட அவர் அச்சமடைந்தார் அடுத்த வயலில் நின்று கொண்டிருந்த முகமது மீரா என்பவரை சத்தம்போட்டு கூப்பிட்டார் அதற்குள் அந்த சிறுத்தை கண்ணிமைக்கும் நேரத்தில் மறைந்தது 

இதுபற்றி விவசாயி செந்தில்குமார் கூறுகையில் 

நான் வயலில் நின்று கொண்டிருந்தபோது உறுமல் சத்தம் கேட்டு திரும்பிப்பார்த்தேன் அப்போது சிறுத்தைப்புலி நிற்பதைக்கண்டு பயந்துபோய் பக்கத்து வயலில் நின்றிருந்த முகமது மீரா என்பவரை சத்தம்போட்டு கூப்பிட்டேன் அதற்குள் அந்த சிறுத்தை ஓடிவிட்டது கடந்த சில நாட்களாகவே கொக்கு மயில் ஆகியவை இறந்த நிலையில் கிடந்தது அப்போது எதனால் என்று தெரியவில்லை இப்போது இது சிறுத்தைப்புலி தாக்கிதான் இறந்திருக்கக்கூடும் என்று சந்தேகம் எழுந்துள்ளது இது பற்றி வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தேன் என்றார்

 இது பற்றி வனக்காப்பாளர் இராமச்சந்திரன் கூறுகையில்

 சிறுத்தைப்புலியை பார்த்ததாக பொதுமக்கள் கூறுகின்றனர் அது சிநுத்தை தான் என தற்போது உறுதியாக கூறமுடியாது வேறு காட்டு விலங்காவும் இருக்கலாம் அது பற்றி விசாரணை செய்து வருகின்றோம் என்றார் மேலும் காவல் துறையினர் மற்றும் வருவாய்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்

 விவசாயி செந்தில்குமார்










0 comment(s) to... “அதிரை பகுதியில் சிறுத்தைப்புலி நடமாட்டம்? பொதுமக்கள் பீதி பரபரப்பு-படங்கள்இணைப்பு”