முத்துப்பேட்டையில் சுகாதார துறை சார்பில் டெங்கு விழிப்புணர்வு பேரணி!

Posted January 14, 2015 by Adiraivanavil in Labels:
 முத்துப்பேட்டையில் வட்டார சுகாதார துறை சார்பில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்களால் டெங்கு விழிப்புணர்வு பேரணி நேற்று நடைப்பெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியர் பெரியசாமி தலைமை வகித்தார.; அரசு மருத்துவர் அரவிந்குமார், சுகாதார ஆய்வாளர் பழனியப்பன் ஆகியோர் விளக்கி பேசினார். இதில் வட்டார சுகாதார அலுவலர் டாக்டர் புஷ்பா மாணவர்கள் கலந்துக்கொண்ட விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தார்.
பேரணி பள்ளி வளாகத்தில் இருந்து புறப்பட்டு மன்னை சாலை, குமரன்பஜார் வழியாக பழைய பேருந்து நிலையம் சென்று மீண்டும் அதே வழியாக மீண்டும் பள்ளியை சென்று அடைந்தது. நிகழ்ச்சியில் உதவி தலைமையாசிரியர் சஞ்சய், சுகாதார ஆய்வாளர்கள் ராஜ்குமார், சீனிவாசன், ராஜேஷ், ஹரிபாஸ்கர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்துக்கொண்டனர். 

படம்செய்தி 
நிருபர் : மு.முகைதீன்பிச்சை 
முத்துப்பேட்டை


0 comment(s) to... “முத்துப்பேட்டையில் சுகாதார துறை சார்பில் டெங்கு விழிப்புணர்வு பேரணி!”