பேராவூரணி அருகே உள்ள வீரியங்கோட்டை கிராமத்தில் சமத்துவ மாட்டுபொங்கல் விழா மாரியம்மன் கோவில் திடலில் நடைபெற்றது. ஊராட்சிமன்ற தலைவர் வேலுச்சாமி தலைமை தாங்கினார். இதில் ஏராளமான ஆண்களும், பெண்களும் கூடி மாட்டுபொங்கல் வைத்தனர். தொடர்ந்து வாணவேடிக்கையும் நடைபெற்றது. சமத்துவ மாட்டுப்பொங்கல் விழாவில் நடிகர் தலைவாசல் விஜய், தனது மனைவி
ராஜேஸ்வரியுடன் கலந்து கொண்டு பொங்கல் வைத்தனர். விழாவில் பா.ஜ.க. மாவட்ட முன்னாள் செயலாளர், முத்துகிருஷ்ணன், முன்னாள் தி.மு.க. ஒன்றிய செயலாளர் சுப.சேகர், சொ.மெய்ஞானம், சேதுராமன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்
நன்றி தினத்தந்தி