முத்துப்பேட்டையில் போலீஸ் தடையை மீறி எஸ்டிபிஐ கட்சி ஆர்ப்பாட்டம்
Posted January 31, 2015 by Adiraivanavil in Labels: SDPI
முத்துப்பேட்டையில் போலீஸ் தடையை மீறி
ஆர்ப்பாட் டம் நடத்திய எஸ்டிபிஐ கட்சியினர் கோட்சே படத்தை எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
முத்துப்பேட்டையில் காந்தி நினைவு நாளான நேற்று எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் கோட்சேவிற்கு சிலை வைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்த முத்துப்பேட்டை போலீசில் 15 நாட்களுக்கு முன் அனுமதி கோரப்பட்டது.
இதற்கு முதலில் அனுமதி வழங்கிய போலீசார், நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டத்திற்கு தடை விதித்து கட்சி நிர்வாகி வீட்டில் நோட்டிஸ் ஒட்டினர். இந்நிலையில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்த முத்துப்பேட்டை பேரூராட்சி அலுவலகம் அருகே ஏராளமான போலீ சார் குவிக்கப்பட்டனர். அப்போது அங்கு கட்சியின் மாவட்ட பொதுச் செய லாளர் நெய்னா முகம்மது தலைமையில் 100க்கும் மேற்பட்டவர்கள் வந்து பேரூ ராட்சி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது திடீரென்று அவர்கள் கோட்சேவின் உருவப்படத்தை தீயிட்டு கொளு த்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் போலீசார் அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்துவதையும், கோட்சே படம் எரிப்பதை யும் தடுக்காமல் வேடிக்கை பார்த்தனர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சேக் தாவூது, நகர செயலாளர் தீன்முகம்மது ஹாஜா, அப்துல் மாலிக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
0 comment(s) to... “முத்துப்பேட்டையில் போலீஸ் தடையை மீறி எஸ்டிபிஐ கட்சி ஆர்ப்பாட்டம்”