பட்டுக்கோட்டையில்சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாகன பேரணி
Posted January 21, 2015 by Adiraivanavil in Labels: பட்டுக்கோட்டை
பட்டுக்கோட்டை நகராட்சி, போக்குவரத்து காவல்துறை சார்பில் 26வது சாலை பாது காப்பு வார விழா நடைபெற்றது.இதைமுன்னிட்டு தலைக்கவசம் அணிந்து இரு சக்கர வாகனம் ஓட்டுவதன் அவசியத்தை வலியுறுத்தி நேற்று இரு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை வருவாய் கோட்டாட்சியர் அரங்கநாதன், நகராட்சித் தலைவர் ஜவஹர்பாபு ஆகியோர் துவக்கி வைத் தனர். பேரணி பேரு ந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு ரயில்வே ஸ்டேஷன் சாலை, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சாலை, சின்னையாதெரு, தஞ்சை சாலை வழியாக பேருந்து நிலை யத்தை அடைந்தது. பேரணியில் நகராட்சி ஆணையர் அச்சையா, இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ்வரன், போக்குவரத்து எஸ்.ஐ.அபுதல்ஹா, நகரமைப்பு ஆய்வாளர் கருப்பையன், நகராட்சி பணியாளர்கள், நண்பர்கள் மனித நேய மன்றத் தலைவர் அந்தோணிசாமி, செயலாளர் தென்னவன், செந்தில், தென்ன ரசு, ராஜ்குமார், மனோஜ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நன்றி தினகரன்
0 comment(s) to... “பட்டுக்கோட்டையில்சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாகன பேரணி”