அதிராம்பட்டினம் கடல் பகுதியில் பிடிபடும் நெடுங்கால் நண்டுகள்- (படங்கள்இணைப்பு)

Posted January 29, 2015 by Adiraivanavil in Labels:
அதிராம்பட்டினம் கடல் பகுதியில்  நெடுங்கால் நண்டு அதிக அளவில் மீனவர்கள் வலையில் அகப் பட்டு வருகிறது. நெடுங்கால் நண்டுகளை துறைமுக பகுதியிலேயே நண்டு வியாபாரிகள் விலைகொடுத்து வாங்கி செல்கின்றனர். வியாபாரிகள் நண்டு களை தூத்துக்குடி, சென்னை போன்ற பகுதி க்கு அனுப்பி வைக்கின்றனர். அங்கு நண்டு களை அவித்து சதைகளை தனியாகவும், நண்டு கால் சதை களை தனியாகவும் பிரித்து டப்பாவில் அடைத்து சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா என பல நாடுகளுக்கு அனுப்பி வைக்கின்றனர். நெடுங்கால் நண்டுவிற்கு உலகஅளவில் நல்ல வரவேற்பு உள்ளது.இதுகுறித்து மீனவர் ஒருவர்  கூறுகையில் கூறுகையில், நெடுங்கால் நண்டு ஒரு படகிற்கு 5 கிலோவிலிருந்து 10 கிலோ வரையும் கிடைக்கிறது. 1 கிலோ 300 ரூபாய்க்கு விலை போகிறது. துறைமுக பகுதியிலேயே நண்டுகளை வியாபாரிகள் வாங்கி விடுகின்றனர். முதல் ரக நண்டுகளை எடுத்துக்கொண்டு வாட்டர் நண்டுகளை ஒதுக்கி விடுகின்றனர். உள்ளூர் மார்க்கெட்டில் குறைந்த விலையில் விற்பனை செய்கின்றனர். 







0 comment(s) to... “அதிராம்பட்டினம் கடல் பகுதியில் பிடிபடும் நெடுங்கால் நண்டுகள்- (படங்கள்இணைப்பு)”