முத்துப்பேட்டை அருகே சாராயம் விற்ற பெண் கைது

Posted January 23, 2015 by Adiraivanavil in Labels:
 முத்துப்பேட்டை அடுத்த தம்பிக்கோட்டை வடகாடு கிராமத்தை சேர்ந்தவர் ராஜலட்சமி(48), இவர் தனது வீட்டி பதுக்கி வைத்து சாராயம் விற்று வருவதாக முத்துப்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து முத்துப்பேட்டை போலீசாருடன் இணைந்து ஆயுதப்படை போலீசார் இருவர் மாறுவேடத்தில் சாராயம் வாங்குவது போல் சென்று ராஜலட்சமியிடம் சாராயம் கேட்டுள்ளனர,; அதற்க்கு அவர் வீட்டில் எடுத்துவந்து கொடுக்கும் பொழுது கையும்களவுமாக ராஜலட்சமியை
பிடித்தனர். பின்னர் அவரது வீட்டில் இருந்த சாராயத்தையும் பறிமுதல் செய்தனர். இதுக்குறித்து முத்துப்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் நதியா வழக்கு பதிவு செய்து ராஜலட்சமியை கைது செய்தார்.



படம் செய்தி: 
நிருபர் : மு.முகைதீன்பிச்சை 
முத்துப்பேட்டை


0 comment(s) to... “முத்துப்பேட்டை அருகே சாராயம் விற்ற பெண் கைது”