முத்துப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது. வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் புஷ்பா தலைமை வகித்தார். ஒன்றிய குழுத் தலைவர் ஆர்.கே.பி.நடராஜன் போலியோ சொட்டு மருந்தை குழந்தைக்கு வழங்கி துவக்கி வைத்து பேசினார். நிகழ்ச்சியில் அரசு மருத்துவர்கள் அரவிந்த் குமார், விஜயராஜன், ஜான்ஜோஜிப், அருண்சந்தர், சுகாதார ஆய்வாளர்கள் பழணியப்பன், சீனிவாசன், ராஜேஸ், பகுதி செவிலியர் அஞ்சம்மாள், அங்கன்வாடி பணியாளர்கள் புனிதா, விஜயகுமாரி, மற்றும் பலரும் கலந்துக் கொண்டனர். இதே போல் மதியழங்காரம் ஊராட்சி ஒன்றிய
துவக்கப்பள்ளியில் நடந்த முகாமை பேரூராட்சி கவுன்சிலர் நாசர் துவக்கி வைத்தார். இதே போல் முத்துப்பேட்டை ஒன்றியம் முழுவதும் 68 மையங்களில் 300க்கும் மேற்பட்ட பணியாளர்களைக் கொண்டு போலியோ சொட்டு மருந்து முகாம் நடந்தது. இதில் 8596 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது என்றும் இதற்கு ஒத்தலைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றியை கூறுவதாக வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் புஷ்பா தொவித்தார்.
நன்றி படங்கள் செய்திகள்
நிருபர் : மு.முகைதீன்பிச்சை
முத்துப்பேட்டை