அதிராம்பட்டினத்தில் மயில் வேட்டையா? காயத்துடன் மயில் மீட்பு

Posted January 06, 2015 by Adiraivanavil in Labels:
அதிராம்பட்டினம் அடுத்த தொக்காலிகாடு மகாராஜசமுத்திரம் அணைக்கட்டு பகுதியில் காப்பு காடுகள் உள்ளது. இங்கு மயில்கள், நரி, காட்டுப்பூனை, உடும்பு உள்ளிட்ட மிருகங்கள் உள்ளன. இன்று காலை காட்டு வழியாக சென்ற சுரேஷ் என்பவர் காலில் பலத்த காயத்துடன் துடித்துக்கொண்டிருந்த ஒரு ஆண் மயிலை பார்த்தார்.அந்த மயில் பறக்க முடியாமல் தரையில் படுத்திருந்தது. இது குறித்து அவர் பஞ்சாயத்து தலைவர்
சிவக்குமார் மூலமாக வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் வன அலுவலர்கள் வந்து அந்த மயிலை கால்நடை மருத்துவமனைக்கு எடுத்து சென்று சிகிச்சை அளித்தனர். அந்த மயிலை மிருகங்கள் கடித்ததா அல்லது யாரும் வேட்டையாடியதால் காயம் அடைந்ததா என வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


0 comment(s) to... “அதிராம்பட்டினத்தில் மயில் வேட்டையா? காயத்துடன் மயில் மீட்பு ”