அதிரை நசுவினி ஆறு பகுதியில்அதிகளவில் குவியும் பறவைகள்-{படங்கள் இணைப்பு}

Posted January 29, 2015 by Adiraivanavil in Labels:
 அதிராம்பட்டினத்தில் இயற்கை எழில் சூழ்ந்த  நீர் நிலைகளுக்கு பஞ்சமில்லை. ஏராளமான குளங்கள் உள்ளன. ஆறுகளும் ஓடுவதால். இங்குள்ள குளங்கள், ஆறுகளை யொட்டி ஏராளமான பசுமையான மரங்களும் உள்ளதால் குளு, குளு கால நிலை நிலவுகிறது பறவை இனங்களை கவர்ந்து இழுப்பதாக உள்ளது.
வழக்கமான
குளிர்காலமான செப்டம்பர் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை வெளிநாட்டு பறவை இனங்கள் அதிகளவில் படையெடுப்பு வழக்கம். சுமார் 42–க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பறவை இனங்கள் சீசன் காலங்களில் வருகை தரும்.
தற்போது நீர் நிலைகளில் கோடை மழை மற்றும் தென்மேற்கு பருவமழை காரணமாக தண்ணீர் ஓரளவு காணப்படுவதால் பறவைகள்  உப்பளங்களிலும், குளங்களிலும் வெளிநாட்டு பறவைகளும் உள்நாட்டு பறவைகளும் திரண்டு நிற்கும் அழகை காண கண்கொள்ளாக் காட்சியாக உள்ளது
அதிரை நசுவினி ஆற்று பகுதியில்வழியாக வாகனங்களில் செல்பவர்கள் வாகனங்களை நிறுத்தி பறவைகளின் அழகை ரசித்து செல்கிறார்கள். நாமக்கோழி என்று அழைக்கப்படும் பறவைகள் அதிரை பகுதியில்பகுதியில் அதிகளவில் காணப்படுகிறது. இதுபோல கூழாக்கிடா, செங்கால் நாரை, சாம்பல் நாரை, நடுத்தர கொக்கு உள்பட கொக்கு வகைகளும் அதிகளவில் காணப்படுகின்றன.
{படங்கள்

செந்தில்













0 comment(s) to... “அதிரை நசுவினி ஆறு பகுதியில்அதிகளவில் குவியும் பறவைகள்-{படங்கள் இணைப்பு}”