பட்டுக்கோட்டை அருகே மின் சாரம் தாக்கி கொத்தனார் பலியானார்.

Posted January 08, 2015 by Adiraivanavil in Labels:
பட்டுக்கோட்டை அடுத்த அண்டமி கிரா மத்தை சேர்ந்தவர் ஆனந்த். இவரது மகன் அரவிந்தன் (22). கொத்தனார் வேலை பார்த்து வந்தார். இவர் நேற்றுமுன்தினம் பெரியகோட்டை கிராமத்தில் பயணிகள் நிழற்குடை கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார். பணிகள் முடிவடைந்து கீழே இறங்கும் போது திடீரென சறுக்கினார். அப்போது கீழே விழாமல் இருப்பதற்காக எதிர்பாராத
விதமாக மேலே சென்ற உயர் அழுத்த மின்கம்பியை பிடித்ததில் ஷாக் அடித்து கீழே விழுந் தார். உடனடியாக அவரை பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்த னர். ஆனால் வரும் வழியி லேயே அரவிந்தன் பலியா னார். இதுகுறித்து மதுக்கூர் சப்இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.



நன்றி தினகரன்


0 comment(s) to... “பட்டுக்கோட்டை அருகே மின் சாரம் தாக்கி கொத்தனார் பலியானார்.”