பட்டுக்கோட்டையில் வியாபாரி வீட்டில் 13 பவுன் நகை திருட்டு மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
Posted January 22, 2015 by Adiraivanavil in Labels: பட்டுக்கோட்டை
பட்டுக்கோட்டையில் வியாபாரி வீட்டில் 13 பவுன் நகையை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
13 பவுன் நகைகள் திருட்டு பட்டுக்கோட்டை சுப்பையாபிள்ளை தெருவை சேர்ந்தவர் திருப்பதி. இவர் மருந்து மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இவரது வீட்டின் தரைதளத்தில் மருந்து வியாபார அலுவலகம் உள்ளது. மாடியில் குடும்பத்துடன் திருப்பதி வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் திருப்பதி தனது குடும்பத்தினருடன் தூங்கி விட்டார். நேற்று காலை திருப்பதியின் மனைவி சசிகலா எழுந்து பார்த்த போது வீட்டின் அலமாரியில் வைக்கப்பட்டிருந்த 13 பவுன் நகைகள் காணவில்லை. இதனால் இவர் அதிர்ச்சி அடைந்தார். மர்ம நபர்கள் வீடு புகுந்து நகைகளை திருடி சென்றது தெரிய வந்தது.
இதுகுறித்து திருப்பதி பட்டுக்கோட்டை போலீசுக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்த பட்டுக்கோட்டை உதவி போலீஸ் சூப்பிரண்டு தீபா கானேகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் தஞ்சையிலிருந்து மோப்பநாய் ராஜராஜன் கொண்டு வரப்பட்டு, திருட்டு நடந்த வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடிநின்றது. யாரையும் கவ்விப் பிடிக்கவில்லை. தஞ்சையில் இருந்து வந்த தடய அறிவியல் நிபுணர் கண்ணகி கைரேகைகளை பதிவு செய்தார்.இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ்வரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு நகைகளை திருடி சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
நன்றி தினத்தந்தி
0 comment(s) to... “ பட்டுக்கோட்டையில் வியாபாரி வீட்டில் 13 பவுன் நகை திருட்டு மர்ம நபர்களுக்கு வலைவீச்சு”