அதிராம்பட்டினம் ஏரிப்புறக்கரை, கீழத்தோட்டம், மறவக்காடு ஆகிய பகுதிகளில் கடற்கரையை ஒட்டி 3 ஆயிரம் ஏக்கரில் உப்பளங்கள் உள்ளன. மழைக்காலம் முடிந்து கோடை துவங்க உள்ளதால் உப்பு உற்பத்தி செய்வதற்கு உப்பளங்களில் முதல்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. உப்பளங்களில் தேங்கிய நீரை பம்புசெட் உதவியுடன் வெளியேற்றும் பணிகள் முடிவடைந்துள்ளது. தற்போது உப்பளங்களில் உள்ள வண்டல்களை அகற்றும் பணிகள்
நடைபெற்று வருகிறது. அதிராம்பட்டினம் பகுதியில் உள்ள அனைத்து உப்பளங்களிலும் இந்த முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் இன்னும் ஒருவாரகாலம் நடக்கும் என்றும், அதன்பின் பாத்தி அமைத்தல்,கட்டை அடித்தல் போன்றவை முடிந்த பின் உப்பு உற்பத்தி தொடங்கும். இவையெல்லாம் முடிய இன்னும் ஒரு மாதமாகும் என்று உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.