முத்துப்பேட்டையில் மாணவ, மாணவிகளின் சுகாதார விழிப்புணர்வு போட்டி!

Posted January 15, 2015 by Adiraivanavil in Labels:
, முத்துப்பேட்டை தெற்குத்தெரு மதியலங்காரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவ, மாணவிகளின் சுகாதார விழிப்புணர்வு குறித்த பேச்சு போட்டி, ஓவியபோட்டிகள் நடைப்பெற்றது. இதில் முதல் மூன்று இடங்களை பிடித்தாக மாணவிகள் பர்வின், சுமையா, ரபிக்காபானு, தியா அமரின், ருத்தே, அப்ரா ஆகியோர் தேர்ந்துதேடுக்கப்பட்டனர். அவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி நடைப்பெற்றது. பள்ளி தலைமையாசிரியர் தீனதயாளன் தலைமை வகித்தார். உதவி
தலைமையாசிரியை ஜெயலட்சுமி முன்னிலை வகித்தார். பேரூராட்சி கவுன்சிலரும், கல்விக்குழு தலைவருமான நாசர் மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் அங்கன்வாடி பணியாளர் புனிதா உட்பட பலரும் கலந்துக்கொண்டனர்.

படம்செய்தி 
நிருபர் : மு.முகைதீன்பிச்சை 
முத்துப்பேட்டை


0 comment(s) to... “முத்துப்பேட்டையில் மாணவ, மாணவிகளின் சுகாதார விழிப்புணர்வு போட்டி!”