பட்டுக்கோட்டை புனித இசபெல் பெண்கள் பள்ளி ஆண்டு விழா
Posted January 11, 2015 by Adiraivanavil in Labels: பட்டுக்கோட்டை
பட்டுக்கோட்டை புனித இசபெல் பெண்கள் மேல்நிலைப்பள்ளி பள்ளி ஆண்டு விழா, பணி நிறைவு மற்றும் பாராட்டு விழா என முப்பெரும் விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.விழாவில் பட்டுக்கோட்டை மறைவட்ட அதிபரும், பங்குதந்தையு மான மரியசூசை அடிகளார் தலைமையில் கூட்டுத்திருப்பலி நடைபெற்றது. பட்டுக்கோட்டை எம்.எல்.ஏ. ரெங்கராஜன் தலைமை வகித்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி உரை நிகழ்த்தினார். பள்ளித் தலைமையாசிரியை ஜெபமாலை வரவேற்றார். நகராட்சித் தலைவர் ஜவஹர் பாபு, நகராட்சி ஆணையர் அச்சயா சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினர். மாணவியர்கள் பல்வேறு கலைநிகழ்ச்சிகளை வழங்கினர்.
விழாவில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், ஆசிரியைகள், பிற பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், முதல்வர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் பிரான்சிஸ், ரவிச்சந்திரன், பள்ளி ஆசிரியைகள், பெற்றோர்கள், மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
முடிவில் ஆசிரியை மரியசெங்கோல்லூசியா நன்றி கூறினார்.
நன்றி தினகரன்
0 comment(s) to... “பட்டுக்கோட்டை புனித இசபெல் பெண்கள் பள்ளி ஆண்டு விழா”