skip to main |
skip to sidebar
Posted January 28, 2015
by
Adiraivanavil
in
Labels:
முத்துப்பேட்டை
முத்துப்பேட்டை அருகேயுள்ள கற்பகநாதர்குள பகுதியை சேர்ந்தவர் அய்யப்பன்(25). இவர் கோவையில் உள்ள ஒரு பேக்கரியில் வேலை செய்து வந்தார். கடந்த ஞாயிறு அவர் ஊருக்கு வந்திருந்தார். அன்று மதியம் வீட்டில் தனியாக இருந்த அவர் விஷம் குடித்து மயங்கிக் கிடந்தார். உறவினர்கள் அவரை மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் அய்யப்பன் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை பலவருடமாக காதலித்து வந்ததாகவும், சம்பவத்தன்று அவர்கள் சந்தித்து பேசிக் கொண்டிருந்ததை பெண் தரப்பினர் பார்த்து இருவரையும் கண்டித்ததுடன், அய்யப்பனை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் அய்யப்பன் தற்கொலை செய்து கொண்டதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இதுகுறித்து முத்துப்பேட்டை எஸ்ஐ பெர்னாண்டஸ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.