அதிரையில் அனைத்து பகுதிகளிலும் நாளை போலியோ சொட்டுமருந்து முகாம்

Posted January 17, 2015 by Adiraivanavil in Labels:

2¼ லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து: கலெக்டர் சுப்பையன் தகவல்தஞ்சாவூர் மாவட்டத்தில் 18.1.2015 அன்று நடைபெறும் முதலாவது சுற்றில், 2 லட்சத்து 28 ஆயிரத்து 758 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இப்பணியில் 6 ஆயிரத்து 40 சொட்டு மருந்து வழங்கும் பணியாளர்களும் 178 மேற்பார்வையாளர்களும் மற்றும்
120 மருத்துவ அலுவலர்களும் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
இதனைத்தொடர்ந்து அதிரையிலும் அரசு மருத்துவமனை,  கீழத்தெரு சங்கம், மேலத்தெரு சங்கம், பழஞ்செட்டி தெரு, முத்தம்மாள் தெரு, புதுமனை தெரு,செட்டி தோப்பு காலனி, மாரியம்மன் கோயில் தெரு, கடற்கரை தெரு, பிள்ளைமார் தெரு காந்தி நகர், தைக்கால் தெரு, ஆகிய பகுதிகளில் நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறன்றன. 


0 comment(s) to... “அதிரையில் அனைத்து பகுதிகளிலும் நாளை போலியோ சொட்டுமருந்து முகாம்”