முத்துப்பேட்டை பஸ் ஸ்டான்டில் பரபரப்பு. அ.தி.மு.கவினருக்கு போட்டியாக மின் கம்பத்திற்கு மாலை போட்டு வழிப்பட்ட இளம் பெண்.
Posted January 19, 2015 by Adiraivanavil in Labels: முத்துப்பேட்டை
முத்துப்பேட்டை பழைய பேருந்து நிலையத்தில் நேற்று முன்தினம் அ.தி.மு.க சார்பில் எம்.ஜி.ஆர் பிறந்த நாள் விழா என்பதால் பெரும் பரபரப்பாக காணப்பட்டது. அப்பொழுது மருதங்காவெளி பகுதியைச் சேர்ந்த சிவகாமி என்ற இளம் பெண் அங்கு வந்தார். திடீரென்று தனது சேலையைக் கொண்டு எம்.ஜி.ஆரின் சிலையை சுத்தம் செய்து விட்டு அதன் கீழே கோலமும் போட்டார். அதன் பின்னர் அ.தி.மு.கவினர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி கொண்டிருந்தனர். இதனை கண்ட இளம் பெண் சிவகாமி பழைய பேருந்து நிலையம் நடுவில் உள்ள உயரம் மின்
விளக்கின் மின் கம்பத்தில் தான் வைத்திருந்த ஒரு சாமிப்படத்தை மாட்டி விட்டு மின் கம்பத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் விதமாக கும்பிட்டுக் கொண்டு மின்கம்பத்தைச் சுற்றி வந்தார். பின்னர் மின் கம்பத்தின் அடியில் படுத்து வணங்கி வழிப்பட்டார். அ.தி.மு.கவினர் நடத்திய நிகழ்ச்சியை கிண்டல் அடித்து இந்த இளம் பெண் மின் கம்பத்தை வழிப்பட்ட செயலை அ.தி.மு.க நகர செயலாளரும், பேரூராட்சி தலைவருமான அருணாச்சலம் மற்றும் அ.தி.மு.கவினர் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர். இச்சம்பவம் முத்துப்பேட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
படம் செய்தி:
நிருபர் : மு.முகைதீன்பிச்சை
முத்துப்பேட்டை
முத்துப்பேட்டை


0 comment(s) to... “முத்துப்பேட்டை பஸ் ஸ்டான்டில் பரபரப்பு. அ.தி.மு.கவினருக்கு போட்டியாக மின் கம்பத்திற்கு மாலை போட்டு வழிப்பட்ட இளம் பெண்.”