முத்துப்பேட்டையில் கானும் பொங்கல் விளையாட்டு போட்டி(படங்கள்இணைப்பு)

Posted January 19, 2015 by Adiraivanavil in Labels:
 முத்துப்பேட்டை அடுத்த கோவிலூர் வடக்காடு

கிராமத்தில் நேற்ற முன்தினம் மாலை இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் கானும் பொங்கல் விளையாட்டு மற்றும் பலவித போட்டிகள் நடத்தப்பட்டது. ஊராட்சி மன்ற தலைவர் ரவி கலந்துக் கொண்டு போட்டிகளை துவக்கி வைத்தார். இதில் கபடி, கிரிக்கெட், பானை உடைத்தல், இசை நாற்காலி, சைக்கிள் போட்டி, ஊசி நூல் கோர்த்தல், கன்னி பெண்கள் பொங்கல் வைக்கும் போட்டிகள் நடத்தப்பட்டது. முடிவில் போட்டிகளில் தேர்வு பெற்ற அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்;ச்சியில் இளைஞர்
மன்ற தலைவர் பிரகாஷ், நிர்வாகிகள் விவேக், கண்ணன், குருசேவ் உட்பட நூற்றுக்கணக்கான இளைஞர்கள், இளம் பெண்கள் கலந்துக் கொண்டனர். 
அதே போல் முத்துப்பேட்டை அடுத்த ஆலங்காடு கிராமத்தில் அம்பேத்கர் மறுமலர்ச்சி மன்றத்தின் சார்பில் மாட்டு பொங்கல் விழா நடைபெற்றது. ஆலங்காடு ஊராட்சி மன்றத் தலைவர் குணசேகரன் தலைமை வகித்தார். உடற்பயிற்சி மைய இயக்குனர் அமலநாதன் ஜேசப் விளையாட்டு போட்டியைத் துவக்கி வைத்தார். மன்ற செயலாளர் கோவிந்தராஜ் முன்னிலை வகித்தார். இதில் விளையாட்டு போட்டிகளிலில் கலந்து கொண்டவர்களுக்கு ஒன்றிய கவுன்சிலர் ஜெகன் பரிசுகளை வழங்கி பேசினார். நிகழ்ச்சியில் கிராமத்தைச் சேர்ந்த பொன்.மேகநாதன், சாமிதுரை உட்பட பலரும் கலந்துக் கொண்டனர். முடிவில் லோகுபாபு நன்றி கூறினார்


படம் செய்தி:
நிருபர் : மு.முகைதீன்பிச்சை 
முத்துப்பேட்டை











0 comment(s) to... “முத்துப்பேட்டையில் கானும் பொங்கல் விளையாட்டு போட்டி(படங்கள்இணைப்பு)”