10 மாதத்தில் 20 கிலோ எடைக்கு வளர்ந்த ஆச்சரியக் குழந்தை
Posted January 14, 2015 by Adiraivanavil in Labels: வெளிநாடுசெய்தி
ஆனால், நாளடைவில் எடை கூடிக் கொண்டே வந்து பத்தே மாதங்களில் 20 கிலோ எடையுடன் மொழுமொழு, கொழுக்கொழு குழந்தையாக அக்கம்பக்கத்து வீட்டில் உள்ளவர்களின் செல்லக் குட்டியாக இந்தக் குழந்தை திகழ்ந்தாலும் வயதுக்கு மீறிய இரட்டை எடையுடன் வளர்ந்துவரும் தனது செல்ல மகளின் எதிர்காலம் பற்றி சாண்ட்ரா பிராங்கோவால் கவலைப்படாமல் இருக்க முடியவில்லை.
10 மாதங்களுக்குள் இரட்டிப்பாகி விட்ட இந்த உடல் பருமன் பத்து ஆண்டுகளுக்கு பிறகு நூறு மடங்காகி விடாமல் இருக்க வேண்டுமே என்ற வேதனை அவரை இரவும், பகலும் வாட்டிக் கொண்டே இருக்கின்றது.
இது தொடர்பாக உரிய சிகிச்சை அளித்து மகளின் உடல் எடையை குறைக்க என்ன செய்வது? என்பது தொடர்பாக டாக்டர்களிடம் ஆலோசனை கேட்டுவரும் இவர், ’தற்போது நான் வேலை ஏதும் இல்லாமல் இருப்பதால் சிகிச்சை செலவுக்கு என் கையில் பணம் இல்லை. அதனால், முழுவீச்சில் சிகிச்சை அளிப்பதில் சற்று சிரமம் ஏற்பட்டுள்ளது’ என்று கூறுகிறார்.
0 comment(s) to... “10 மாதத்தில் 20 கிலோ எடைக்கு வளர்ந்த ஆச்சரியக் குழந்தை”