பட்டுக்கோட்டையில் புதிய பேருந்து நிலையம் அமைக்க திட்ட மதிப்பீடு-நகராட்சி அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்

Posted January 08, 2015 by Adiraivanavil in Labels:

பட்டுக்கோட்டையில் வர்த்தக நோக்குடன் புதிய பேருந்து நிலையம் அமைக்க திட்ட மதிப்பீடு தயார் செய்யும்படி நகராட்சி அலுவலர்களை கலெக்டர் சுப்பையன் கேட்டுக்கொண்டார்.பட்டுக்கோட்டை நகர வளர்ச்சி பணிகள் குறித்து தஞ்சை கலெக்டர் சுப்பையன் நேற்று திடீர் ஆய்வு செய்தார். பொன்விழாஆண்டு திட்டத்தின் கீழ் பட்டுக்கோட்டை காசாங்குளத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொட ர்ந்து நகராட்சி பேருந்து நிலையத்தில் புதிதாக கட்டப்படவுள்ள
கழிப்பறைக்கான இடத்தை பார்வையிட்டு பொதுமக்கள் மற்றும் பேருந்துகள் வசதிக் காக பேருந்து நிலையத்தில் பேருந்துகள் நுழையும் பகுதியின் எதிரில் கழிப்பறையை கட்ட வேண்டும், கழிப்பறை நவீன வசதியுடன் கூடிய கழிப்பறையாக அமைக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும் பேருந்து நிலையத்தில் உள்ள கார் ஸ்டாண்டை மல்டி லெவல் கார் ஸ்டாண்டாக மாற்றுவதற்கான உரிய திட்ட மதிப்பீடு தயார் செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
தற்போது நடைபாதை கடைகள் இயங்கி வரும் நாடிமுத்துநகர், காந்தி பூங்கா சாலை ஆகியவற்றை பார்வையிட்டார். தொடர்ந்து நகராட்சி அலுவலகத்தில் நகர வளர்ச்சி பணிகள் முன்னேற்றம் குறித்தும், நகராட்சி அலுவலர்கள், நெடுஞ்சாலைத்துறை மற்றும் மின் வாரிய அலுவலர்களுடன் பணி முன்னேற்றம் குறித்து ஆலோசனை நடத்தினார். அப்போது சாந்தாங்காடு கிராமத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்க நவீன வடிவமைப்பில் வர்த்தக நோக்குடன் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ஒரு திட்ட மதிப்பீடு தயார் செய்ய நகராட்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். நகரின் பிரதான சாலையாக பெரியதெரு இருப்பதால் தெருவில் அமைந்துள்ள நடைபாதைக்கு பாதசாரிகள் மட்டும் நடந்து செல் லும் வகையில் கைப்பிடிகள் அமைத்து மேம்படுத்தவும் நகராட்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மின்கம்பங்களை மாற்றி அமைக்க மின்சாரவாரிய அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
ஆர்டிஓ அரங்கநாதன், தாசில்தார் பாஸ்கரன், நக ராட்சி தலைவர் ஜவஹர் பாபு, துணைத் தலைவர் பாரதி, நகராட்சி ஆணையர் அட்சயா, பொறியாளர் ரங்க ராசு, நகரமைப்பு அலுவலர் ராமலிங்கம், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப் பொறியாளர் சரவணன், உதவி பொறியாளர், மின்சாரவாரிய உதவி செயற்பொறியாளர் ஜெய்சங்கர் மற்றும் நகராட்சி, நெடுஞ்சாலைத் துறை, மின்சாரவாரிய அலுவலர்கள் உடனிருந்தனர்.

நன்றி தினகரன்



0 comment(s) to... “பட்டுக்கோட்டையில் புதிய பேருந்து நிலையம் அமைக்க திட்ட மதிப்பீடு-நகராட்சி அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்”