அதிரை அருகே ஆலமர வேரில் வளர்ந்து வரும் அம்மன் உருவம்.-பரபரப்பு

Posted January 19, 2015 by Adiraivanavil in Labels:

அதிராம்பட்டினம் அருகே உள்ள தம்பிக்கோட்டை முக்கூட்டுச்சாலை கிராமத்தில் உள்ள பத்தாங்காடு சாலையில் ஆலடி காத்தவராயன் கோவில் உள்ளது. இதன் அருகே பழமை வாய்ந்த ஆலமரம் உள்ளது.இந்த மரத்தின் அடியில் உள்ள வேர், அம்மன் உருவத்தில் வளர்வதாக பக்தர்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த உருவத்துக்கு மேல் பகுதியில் ராஜ நாகம் படம் எடுப்பது போன்ற உருவமும் உள்ளது. கோயில் பூசாரி சாமிநாதன் வேரை அலங்கரித்து சிறப்பு பூஜைகள் செய்து வருகிறார்.அப்பகுதி மக்கள் அம்மனாக பாவித்து வழிபட்டு வருகின்றனர். இது குறித்து கோயில் பூசாரி சாமிநாதன் கூறுகையில், இந்த ஆலமரத்து அடியில் அம்மன் குடியிருந்து வருகிறது. நானும் தினமும் அலங்கரித்து சிறப்பு பூஜைகள் செய்து வருகிறேன் என்றார்.

நன்றி தமிழ்முரசு



0 comment(s) to... “அதிரை அருகே ஆலமர வேரில் வளர்ந்து வரும் அம்மன் உருவம்.-பரபரப்பு”