முத்துப்பேட்டையில் எம்.ஜி.ஆர் பிறந்த தினத்தை முன்னிட்டு அ.தி.மு.கவினர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.

Posted January 18, 2015 by Adiraivanavil in Labels:
 முத்துப்பேட்டையில் அ.தி.மு.க சார்பில் எம்.ஜி.ஆரின் 99-வது பிறந்த தினத்தை முன்னிட்டு பழைய பேருந்து நிலையத்தில் உள்ள அவரது சிலைக்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றிய குழுத் தலைவருமான நடராஜன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செழுத்தப்பட்டது. இதில் பலரும் கலந்துக் கொண்டு பேசினார்கள். நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி தலைவி ஜெயலட்சி அம்பிகாபதி, மங்கள் கூட்டுறவு வங்கி தலைவர் மங்கள் அன்பழகன், ஒன்றிய துணைச் செயலாளர் அய்யா தேவர், ஒன்றிய கவுன்சிலர்கள் ஜெகன், மணிமேகலை கந்தவேல்,
கவிதா பாரதிதாசன், பேரூராட்சி கவுன்சிலர் நாசர், ஒன்றிய இலக்கிய அணிச் செயலாளர் தங்கமணி, ஊராட்சி மன்ற தலைவர்கள் ஜெயராமன், குமரவேல், நகர இளைஞர் அணி துணைச் செயலாளர் மருதுராஜேந்திரன், வீட்டு வசதி வாரிய தலைவர் லக்கி மைனுர்தீன், ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் அம்பிகாபதி, நகர அம்மா பேரவை செயலாளர் குருஞ்சி சங்கர், நகர நிர்வாகிகள் கோவிந்தராஜ், அயூப்கான், சிராஜுதீன், யானை காலிது, சுபசிதம்பரம், விசு, மாதவன் உட்பட பலரும் கலந்துக் கொண்டனர். முடிவில் வார்டு செயலாளர் குணகேரன் நன்றி கூறினார்.

படம் செய்தி:
நிருபர் : மு.முகைதீன்பிச்சை 
முத்துப்பேட்டை


0 comment(s) to... “முத்துப்பேட்டையில் எம்.ஜி.ஆர் பிறந்த தினத்தை முன்னிட்டு அ.தி.மு.கவினர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.”