முத்துப்பேட்டை அருகே பொங்கல் விளையாட்டு போட்டி சென்னை துறைமுக இயக்குனர் துவக்கி வைத்தார்!

Posted January 17, 2015 by Adiraivanavil in Labels:
 முத்துப்பேட்டை அடுத்த ஜம்புவானோடை வடகாட்டில் இந்திய அரசு நேரு யுகேந்திரா வழிகாட்டி மன்றம் மற்றும் ஜாம்புவான் இளைஞர் நற்பணி மன்றம் இணைந்து இரண்டு நாட்கள் நடைபெறும் பொங்கல் விளையாட்டு போட்டிகளின் துவக்க விழா நிகழ்ச்சி ஊராட்சி மன்ற தலைவர் சரவணன் தலைமையில் நடைப்பெற்றது. முன்னால் செயலாளர் நித்தியானந்தம் வரவேற்று பேசினார். ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சண்முகம், முன்னால் துணைத்தலைவர் வைரவநாதன், ஊராட்சி மன்ற
ஊறுப்பினர் அய்யப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர.; விளையாட்டு போட்டிகளை சென்னை துறைமுக இயக்குனர் கருப்பு முருகானந்தம் துவக்கி வைத்து பேசினார். நிகழ்ச்சியில் நற்பணி மன்ற தலைவர் கண்ணன் உட்பட பலரும் கலந்துக்கொண்டனர். முடிவில் செயலாளர் கூத்தப்பன் நன்றி கூறினார;

படம்செய்தி 
நிருபர் : மு.முகைதீன்பிச்சை 
முத்துப்பேட்டை
.; 








0 comment(s) to... “முத்துப்பேட்டை அருகே பொங்கல் விளையாட்டு போட்டி சென்னை துறைமுக இயக்குனர் துவக்கி வைத்தார்!”