முத்துப்பேட்டை அடுத்த இடும்பாவணம் கடைத்தெருவில் அரசு டாஸ்மார்க் கடை ஒன்று உள்ளது. அதில் கருவேப்பஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த அய்யப்பன் என்பவர் சூபர்வைசராக பணி புரிகிறார். நேற்று முன்தினம் வியாபாரம் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கும் பொழுது விளாங்காடு கிராமத்தைச் சேர்ந்த சாத்தப்பன் மகன் ராஜ்குமார் என்பவர் சரக்கு விலை கூடுதலாக விற்பனை செய்வதாக புகார் தெரிவித்தார். பின்னர் மேலாளர் அய்யப்பனிடம் கடனுக்கு சரக்கு கேட்டுள்ளார். அதற்கு அவர் மறுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ராஜ்குமார்
சூபர்வைசர் அய்யப்பனை சரமாரியாக தாக்கி டாஸ்மார்க் கடையில் உள்ள கண்ணாடி சோக்கேஸை அடித்து உடைத்துவிட்டு தப்பி ஓடினார். இது குறித்து சூபர்வைசர் அய்யப்பன் முத்துப்பேட்டை காவல் நிலையில் புகார் கொடுத்தார். சப்-இன்ஸ்பெக்டர் நதியா வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய ராஜ்குமாரை தேடி வருகிறார்.
நன்றி
செய்திகள்
நிருபர் : மு.முகைதீன்பிச்சை
முத்துப்பேட்டை