அதிரையில் இரவு நேரத்தில் சாலையில் நிற்கும் மாடுகள்:அவதிபடும் வாகன ஓட்டிகள்-(படங்கள்இணைப்பு)
Posted January 18, 2015 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
அதிராம்பட்டினத்தில் சாலையில் இரவு நேரத்தில் நிற்கும் மாடுகளால் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
நெடுஞ்சாலையில் இரவு நேரத்தில் 20க்கும் மேற்பட்ட மாடுகள் சாலையின் குறுக்கே நிற்கின்றன. இதனால் அதிராம்பட்டினம் பகுதிகளில் இருந்து வேலை முடித்து வீட்டுக்குத் திரும்பும் இருசக்கர வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு
வருகின்றனர். பல நேரங்களில் இந்த மாடுகளால் விபத்துகளும் ஏற்படுகின்றன.மாடுகளின் உரிமையாளர்கள் மாடுகளை வீட்டில் கட்டி வைப்பதில்லை.
மேலும் சாலையோரக் கடைகளில் வீசப்படும் காய்கறிகள், பழங்கள், திண்பண்டங்களை உண்பதற்காக இந்த மாடுகள் சாலைக்கு வருகின்றன. எனவே இந்த மாடுகள் சாலைக்கு வருவதைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இந்த மாடுகள் யாருடைய பராமரிப்பும் இல்லாமல் வளரும் மாடுகள் என்றால் அவைகளை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0 comment(s) to... “அதிரையில் இரவு நேரத்தில் சாலையில் நிற்கும் மாடுகள்:அவதிபடும் வாகன ஓட்டிகள்-(படங்கள்இணைப்பு)”