தஞ்சை மாவட்டத்தில் 11 தாசில்தார்கள் இடமாற்றம்

Posted January 28, 2015 by Adiraivanavil in Labels:

தஞ்சை மாவட்டத்தில் 11 தாசில்தார்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தஞ்சை மாவட்டத்தில் பணிபுரிந்து வந்த தாசில்தார்கள், தனி தாசில்தார்கள் 11 பேர் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் ஏற்கனவே பதவி வகித்த இடமும், தற்போது மாற்றப்பட்ட இடங்களும் வருமாறு:-


தஞ்சை தாசில்தாராக பணியாற்றி வந்த துரைராஜ் திருவையாறு தாசில்தாராக மாற்றப்பட்டுள்ளார். திருவையாறு தனிதாசில்தாராக பணியாற்றி வந்த சுரேஷ் தஞ்சை தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார். திருவையாறு தாசில்தார் மனோகர் மாற்றப்பட்டு தஞ்சையில் காலியாக இருந்த சத்திரம் நிர்வாக தனி தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார்.



பட்டுக்கோட்டை- திருவையாறு



தஞ்சை மாவட்ட வழங்கல் அலுவலரின் நேர்முக உதவியாளராக பணியாற்றி வந்த ரகுராமன் மாற்றப்பட்டு ஒரத்தநாடு தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார். ஒரத்தநாடு தாசில்தாராக பணியாற்றி வந்த பானுகோபன் மாற்றப்பட்டு பட்டுக்கோட்டை நகர்புற நில அளவைத்திட்ட தனிதாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார். பட்டுக்கோட்டை நகர்புற நில அளவைத்திட்ட தனி தாசில்தார் சேதுராமன் பட்டுக்கோட்டை தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார்.



பட்டுக்கோட்டை தாசில்தார் பாஸ்கரன் மாற்றப்பட்டு திருவையாறு தனிதாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார். தஞ்சாவூர் கலால் உதவி ஆணையர் அலுவலக மேலாளர் புஷ்பவள்ளி முத்திரைக்கட்டண தனிதாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார். முத்திரைக்கட்டண தனிதாசில்தார் கார்த்திகேயன், தஞ்சை மாவட்ட வழங்கல் அலுவலரின் நேர்முக உதவியாளராக நிமியக்கப்பட்டுள்ளார். கும்பகோணம் கோட்ட கலால் அலுவலர் உஷா மாற்றப்பட்டு திருவிடைமருதூர் தனிதாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார். திருவிடைமருதூர் தனிதாசில்தார் கார்த்திகேயன் மாற்றப்பட்டு காலியாக இருந்த கும்பகோணம் வட்ட வழங்கல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.


0 comment(s) to... “தஞ்சை மாவட்டத்தில் 11 தாசில்தார்கள் இடமாற்றம்”