முத்துப்பேட்டை பேட்டை சாலையில் வசிப்பவர் சுத்திர போராட்ட தியாகி டாக்டர் கே.எஸ்.முகமது தாவுது(99), நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் படையில் தீவிரமாக பணியாற்றியவர். அவருக்கு நெருங்கிய நண்பராகவும் இருந்தார். இவர் சுதந்திரம் குறித்த எராளமான பாடல்களும், ஆயிரக்கணக்கான கவிதைகளும் எழுதி
உள்ளார.; அதற்க்காக 1996–ம் ஆண்டு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தால் டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. மேலும் இந்தியாவில் உள்ள பல்வேறு அமைப்புகளும் விருது வழங்கி உள்ளது. சமீப காலமாக உடல் நிலை சரியில்லாமல் இருந்தார.; இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை முத்துப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவருக்கு அசைன் முகமது, அபிஸ்முகமது ஆகிய இரு மகன்களும் ஜனபாபானு, முனவரபானு, தாயிராபானு, பொளஜியாபானு ஆகிய நான்கு பெண்குழந்தைகளும், 7 பேர குழந்தைகளும் உள்ளன. அவரது உடலுக்கு திருத்துறைப்பூண்டி தாசில்தார் மதியழகன், கிராம நிர்வாக அலுவலர்கள் பாலமுருகன், தினேஷ்குமார், காங்கிரஸ் கட்சியின் மாவட்ட துணைத்தலைவர் நாச்சிக்குளம் தாஹீர், மாநில செயற்குழு ஊறுப்பினர் சுப்பையன், மாவட்ட செயலாளர்கள் சுந்தரராமன், வைரவநாதன், மாவட்ட விவசாய பிரிவு தலைவர் இளங்கோவன், வர்த்தக பிரிவு தலைவர் வடுகநாதன், வட்டார நிர்வாகிகள் பாலகிருஷ்ணன,; தங்கராஜன், நகர நிர்வாகிகள் ஜகபர் அலி, பேட்டை மஸ்தான,; தமிழ் இலக்கிய மன்ற தலைவர் ராஜ்மோகன், த.மு.எ.ச தலைவர் ரெங்கசாமி, செயலாளர் செல்லத்துரை உட்பட பலரும் இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். பின்னர் நேற்று காலை 11 க்கு அவரின் நல்லடக்கம் முகைதீன்பள்ளி வாசலில் நடைப்பெற்றது. அவரது இறுதி ஊர்வலத்தில் அரசு அதிகாரிகள் மற்றும் அனைத்து கட்சி பிரமுகர்களும் கலந்துக்கொண்டனர்.
படம்செய்தி
1,தியாகி டாக்டர் கே.எஸ்.முகமது தாவுது.
2,தியாகிக்கு தமிழ் இலக்கிய மன்றம் சென்ற ஆண்டு நடத்திய பாராட்டு விழா.
3, 1996–ம் ஆண்டு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட டாக்டர் பட்டம்.
படம்செய்தி நிருபர் : மு.முகைதீன்பிச்சை
முத்துப்பேட்டை
