சாதி மதம் மடமை! தேசம் காப்பது கடமை! என தேசத்தலைவர் படங்களுடன் உறுதிமொழி ஏற்ற அரசுப்பள்ளி.

Posted January 27, 2015 by Adiraivanavil in Labels:
முத்துப்பேட்டை அடுத்த கிளார்வெளி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் குடியரசு தினவிழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் தங்கபாபு தலைமை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் அமிர்தவள்ளி, துணைத் தலைவர் சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெற்றோர் ஆசிரியர்கள் கழகத் தலைவர் ராமமூர்த்தி தேசியக்கொடி ஏற்றி வைத்தார். சிறப்பு அழைப்பாளராக உதவி தொடக்கக்கல்வி அலுவலர் ராஜேந்திரன் கலந்துக்கொண்டு பேசினார். இதில் மாணவர்கள் குடியரசு தினவிழாவை வித்தியாசமாக வரவேற்கும் விதத்தில் 'சாதி மதம் மடமை' 'தேசம் காப்பது கடமை' என்ற பேனருடன் அதனை
உறுதிமொழியாக படித்து தேசத்தலைவர்களின் படங்களை முகமூடியாக மாட்டி கொண்டு நீண்ட நேரம் நின்று உறுதிமொழி ஏற்றனர். இது பார்ப்பவர்களை மெய்மரக்க வைத்தது. நிகழ்ச்சியில் ஆசிரியர் கண்ணன், சத்துணவு அமைப்பாளர்கள் ஜெயந்தி, தமிழ்செல்வி மற்றும் பெற்றோர்கள் உட்பட பலரும் கலந்துக்கொண்டனர்.

படம் செய்தி:
நிருபர் : மு.முகைதீன்பிச்சை 
முத்துப்பேட்டை


0 comment(s) to... “சாதி மதம் மடமை! தேசம் காப்பது கடமை! என தேசத்தலைவர் படங்களுடன் உறுதிமொழி ஏற்ற அரசுப்பள்ளி.”