அதிரை அருகே கடல்குதிரைகள் கடல்பல்லிகள் பறிமுதல் போலீஸார் நடவடிக்கை-படங்கள்இணைப்பு

Posted January 20, 2015 by Adiraivanavil in Labels:
 தஞ்சை மாவட்ட கடலோரப்பகுதிகளில் கடந்த 15 தினங்களாக கடலோர காவல் இன்ஸ்பெக்டர் ஆனந்த் தலைமையில் கடலோர காவல் போலீஸார்கள் தீவிர கண்காணிப்பு  பணியில் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில் அதிராம்பட்டினம் அருகில் இன்ஸ்பெக்டர் ஆனந்த் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர்கள் ஞானசேகர்,ராஜசேகர் மற்றும் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ரவி கார்த்திகேயன் திருவேங்கடம் கிட்டப்பா ஆகியோர் கழுமங்குடா கிராமம்
மீனவர் குடியிருப்புகளில் ஆய்வு மேற்கொண்ட போது மாரியம்மன் கோவில் மேற்கு பகுதியில் சின்னச்சாமி என்கின்ற ஆண்டவர் வயது 55 என்பவர் வீட்டில் தடைசெய்யப்பட்ட கடல் உயிரினங்களான கடல்குதிரை கடல் பல்லிகள் கடல் குழி சங்குகள் உள்ளிட்டவைகள் பதிக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது இதனையடுத்து கடலோர காவல் இன்ஸ்பெக்டர் ஆனந்த் சின்னசாமியை கைது செய்து அவரையும் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட கடல் குதிரை கடல் பல்லி கடல் குழி சங்குகள் ஆகியவற்றையும் வனத்துறையினரிடம் ஒப்படைத்ததர் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கடல் உயிரினங்களில் மதிப்பு முப்பதாயிரம் ஆகும்

 




0 comment(s) to... “அதிரை அருகே கடல்குதிரைகள் கடல்பல்லிகள் பறிமுதல் போலீஸார் நடவடிக்கை-படங்கள்இணைப்பு”