முத்துப்பேட்டையில் நேற்று குடியரசு தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. பல இடங்களில் தேசிய கொடிகளை அவமதிக்கும் சம்பவங்களும் நடந்தது. இச்சம்பவம் தேசிய ஆர்வளர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்த நிலையில் வழக்கமாக பட்டொளி வீசி பறக்கும் நமது தேசிய கொடி, சுமார் 15 அடி முதல் 20 அடி வரை உள்ள கம்பங்களில் ஏற்றி நிகழ்ச்சியை நடத்துவது வழக்கம். அதே போல் சென்னை கோட்டையில் 100 அடிக்கும் மேல் உயரத்தில் உள்ள கம்பத்தில் ஏற்றப்படுவதும் வழக்கம். ஆனால், வழக்கத்துக்கு மாறாக முத்துப்பேட்டை அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ மனை நிர்வாகம் சார்பில் நேற்று நடந்த குடியரசு தின நிகழ்ச்சியில்
தேசிய கொடியை ஒரு ஆள் உயரத்தில் உள்ள ஒரு கம்பத்தில் ஏற்றி; நிகழ்ச்சியை நடத்தினர். இது தேசிய ஆர்வளர்களையும் சமூக ஆர்வளர்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இது குறித்து சமூக ஆர்வளர் முகம்மது மாலிக் கூறுகையில்: மரியாதை காக்கக்கூடிய இந்த தேசிய கொடியை அவமரியாதை செய்யும் வகையில் ஒரு சிறிய கம்பத்தில் ஏற்றி தேசத்திற்கு கலங்கம் ஏற்படுத்தி உள்ளனர். இது எங்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இது தேசத்தில் மண்ணிக்க முடியாத ஒரு குற்றம். இதற்கு சம்மந்நதப்பட்டவர்கள் மீது சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார். இதே போல் பலரும் கருத்து தெரிவித்தனர். மேலும் முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் ஏற்றப்பட்ட தேசியக்கொடி மிகவும் அழுக்காக காணப்பட்டது. அதே போல் டாக்ஸி ஸ்டான்ட்டில் ஏற்றப்பட்ட கொடிமேல் பகுதி கட்டப்படாததால் தலைகீழாக பறந்தது. இதே போல் முத்துப்பேட்டை பல பகுதிகளில் கொடியை அவமதிக்கும் வகையில் சிறிய குச்சிகளால் தேசியக்கொடியைக் கட்டியும் பல இடங்களில் கொடியை சறியாக கட்டாமலும் தலைகீழாக கட்டி கொடி ஏற்றிய சம்பவமும் நடந்தது. இதனால் நேற்று முத்துப்பேட்டை முழுவதும் குடியரசு தினத்தன்று பெரும் பரபரப்பாகவே காணப்பட்டது.
படம்
செய்தி:
நிருபர் : மு.முகைதீன்பிச்சை
முத்துப்பேட்டை
.முத்துப்பேட்டை அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேசியக்கொடியை அவமதிக்கும் வகையில் மருத்துவ மனை நிர்வாகம் சார்பில் நேற்று நடந்த குடியரசு தின நிகழ்ச்சியில் தேசிய கொடியை ஒரு ஆள் உயரத்தில் உள்ள ஒரு கம்பத்தில் ஏற்றி; நிகழ்ச்சியை நடத்தினர்.
3.சமூக ஆர்வளர் முகம்மது மாலிக்