அதிரையில்3ஆண்டுபிறகு ஏரி நிரம்பியது பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை-படங்கள் இணைப்பு
Posted January 24, 2015 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
அதிராம்பட்டினம் அருகே உள்ள புதுக்கோட்டை உள்ளுர் கிராமத்தில் 320 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள செல்லிக்குறிச்சி ஏரி 3 ஆண்டுகளுக்குப்பிறகு முழுக்கொள்ளவை எட்டியதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர் இந்நிலையில் மூன்று ஆண்டுகளாக இந்த ஏரியில் தண்ணீர் இல்லாமல் விவசாயம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் விவசாயிகள் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தன்
பேரில் தற்போது இந்தஏரியை நிரப்ப பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர் இதையடுத்து இந்த ஏரியை பார்வையிட வந்த தஞ்சாவூர் கல்லணைக் கால்வாய் கோட்ட செயல் பொறியாளர் ரேவதி உதவி செயல் பொறியாளர் செல்வராஜ் உதவி பொறியாளர் வெங்கடாஜலம் ஒன்றிய குழு உறுப்பினர் சுப்பரமணியன் மற்றும் விவசாயிகள் அவர்களுக்கு நன்றி தெரிவித்ததோடு விவாயப்பணிகள் முழுமை அடைய இன்னும் 20 தினங்களுக்கு தண்ணீர் தரவேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்துள்ளனர்
0 comment(s) to... “அதிரையில்3ஆண்டுபிறகு ஏரி நிரம்பியது பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை-படங்கள் இணைப்பு”