பொங்கலை முன்னிட்டு சொந்த செலவில் மாணவர்களுக்கு கரும்பு மற்றும் பழம் வழங்கிய தலைமையாசிரியர்!

Posted January 15, 2015 by Adiraivanavil in Labels:
 முத்துப்பேட்டை தெற்குத்தெருவில் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி ஒன்று உள்ளது. இதில் மாணவ, மாணவிகள் நூறுக்கும் மேற்பட்டோர் படித்து வருகின்றனர.; அவர்களுக்கு நேற்று பள்ளியின் தலைமையாசிரியர் தீனதயாளன் தனது சொந்த செலவில் கரும்புகள் மற்றும் பழங்கள் வழங்கினார.; அதனை மாணவ மாணவிகள் மகிழ்ச்சியுடன் பெற்று சென்றனர.; அப்பொழுது உதவி தலைமையாசிரியை ஜெயலட்சுமி, பேரூராட்சி கவுன்சிலரும் கல்விக்குழு தலைவருமான நாசர் மற்றும் பலரும் இருந்தனர். தலைமையாசிரியரின் இந்த
செயலைக்கண்டு பெற்றோர்களும் பொதுமக்களும் தலைமையாசிரியருக்கு பாராட்டு தெரிவித்தனர்.


படம்செய்தி
நிருபர் : மு.முகைதீன்பிச்சை 
முத்துப்பேட்டை


0 comment(s) to... “பொங்கலை முன்னிட்டு சொந்த செலவில் மாணவர்களுக்கு கரும்பு மற்றும் பழம் வழங்கிய தலைமையாசிரியர்!”