தஞ்சை மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு 9 பேர் போட்டியின்றி தேர்வு

Posted January 23, 2015 by Adiraivanavil in Labels:
தஞ்சை மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு 9 பேர் போட்டியின்றி தேர்வுதஞ்சை மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடைபெற்ற தேர்தலில் 9 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
இதுகுறித்து கலெக்டர் அலுவலக செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:–
தஞ்சை மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தற்செயல் மறைமுக தேர்தல்கள் நடந்தது.
ஒரத்தநாடு ஒன்றியக் குழு தலைவராக இருந்த சூரிய மூர்த்தி உடல் நலம் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்தார். இதையடுத்து
அந்த பதவிக்கான தேர்தலில் அ.தி.மு.க.வை சேர்ந்த ஆழிவாய்க்கால் கோவிந்தராஜ் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
கும்பகோணம் அருகே உள்ள உள்ளூர் ஊராட்சி துணை தலைவராக செபஸ்டின் ஸ்டான்லி, தஞ்சை அருகே மொன்னையன் பட்டி ஊராட்சி துணை தலைவராக சித்ரா, பள்ளியேறி ஊராட்சி துணை தலைவராக மணிவண்ணன், மேலவெளி ஊராட்சி துணை தலைவராக வாசுதேவன் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
திருவோணம் அருகே சங்கரநாதர் குடிகாடு ஊராட்சி துணைத் தலைவராக முத்துலெட்சுமி, திருவிடைமருதூர் அருகே திருநரையூர் ஊராட்சி துணைத் தலைவராக ஜெலிபாநாச்சியா, மதுக்கூர் அருகே சிராங்குடி ஊராட்சி துணை தலைவராக ஜெயராமன், வாட்டாக்குடி உக்கடை ஊராட்சி துணை தலைவராக சுப்பிரமணியன், பட்டுக்கோட்டை நகராட்சியில் பணி நியமனக்குழு உறுப்பினராக மாஸ்கோ ஆகியோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


0 comment(s) to... “தஞ்சை மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு 9 பேர் போட்டியின்றி தேர்வு”