அதிராம்பட்டினத்தில் கரை திரும்பிய படகுகளில் போலீசார் சோதனை

Posted January 14, 2015 by Adiraivanavil in Labels:
அதிராம்பட்டினத்தில் கரை திரும்பிய படகுகளில் போலீசார் சோதனைஅதிராம்பட்டினம், ஏரிபுறக்கரை, கீழதோட்டம் ஆகிய பகுதிகளில் நேற்று கடலில் மீன்பிடித்து விட்டு கரைக்கு திரும்பும் மீனவர்களின் படகுகளை மறித்து தடைசெய்யப்பட்ட கடல் உயிரினங்கள் உள்ளதா? என்று கடலோர பாதுகாப்பு குழுமம் சோதனை செய்தது.
கடலோர பாதுகாப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்த், சப்–இன்ஸ்பெக்டர்கள் முத்துகுமார், ரவி ஆகியோர் சோதனை செய்தனர். அந்த
படகுகளில் தடை செய்யப்பட்ட கடல் வாழ் உயிரினங்களான கடல்குதிரை, கடல் ஆமை, கடல்பசு, கடல் அட்டைகள், மற்றும் தடைசெய்யப்பட்ட சங்குகள், சுறா மீன்கள், திருக்கை வகைகள் உள்ளதா என சோதனை செய்தனர்.
மேலும் மீனவர்களிடம் தடைசெய்யப்பட்ட கடல்வாழ் உயிரினங்களை பிடிப்பவர்கள் மீது வனஉயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என இன்ஸ்பெக்டர் ஆனந்த் எச்சரிக்கை விடுத்தார்.


0 comment(s) to... “அதிராம்பட்டினத்தில் கரை திரும்பிய படகுகளில் போலீசார் சோதனை”