முத்துப்பேட்டைஅருகே மனைவியுடன் தகராறு வாலிபர் தற்கொலை

Posted January 08, 2015 by Adiraivanavil in Labels:
 முத்துப்பேட்டை அடுத்த இடும்பாவனம் ஊராட்சி அடைஞ்சவிளாகத்தை சேர்ந்தவர் கண்ணன் (35). இவருக்கு சரண்யா (24) என்ற மனைவியும், 3 வயதில் ஒரு மகள், ஒரு வயதில் ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில் கண்ணனுக்கு அதே பகுதியில் உள்ள ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது.சமீபத்தில் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள
தனது வீட்டுக்கு அழைத்து வந்தார். இதை கண்ணனின் மனைவி மற்றும் உறவினர் எதிர்ப்பு தெரி வித்து அந்த பெண்ணை திருப்பி அனுப்பி வைத்தனர். அப்போது கணவன், மனைவிக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த கண்ணன், கடந்த 1ம் தேதி வீட்டில் இருந்த பூச்சு மருந்தை குடித்தார். ஆபத்தான நிலையில் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கண்ணன் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கண்ணன் இறந்தார். இதுகுறித்து முத்துப்பேட்டை சப்இன்ஸ்பெக்டர் ராமானுஜம் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.



நன்றி தினகரன்


0 comment(s) to... “முத்துப்பேட்டைஅருகே மனைவியுடன் தகராறு வாலிபர் தற்கொலை”