முத்துப்பேட்டை நகர தி.மு.க சார்பில் தை 1 தமிழர் திருநாளை முன்னிட்டு கொடி ஏற்று விழா நிகழ்ச்சி பேரூராட்சி அலுவலகம் அருகில் நடைபெற்றது. மாவட்ட துணைச் செயலாளரும், நகர செயலாளருமான எம்.எஸ்.கார்த்திக் தலைமை வகித்தார். நகர அவைத் தலைவர் ராமஜெயம் கட்சி கொடியை ஏற்றி வைத்து பேசினார். நிகழ்ச்சியில் மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் ஜாம்பை ராமஜெயம், மாவட்ட பிரதிநிதிகள் அகமது இபுராஹிம், மகாராஜா தமீம், ஒன்றிய கவுன்சிலர் ஜாம்மை கல்யாணம், பேரூராட்சி கவுன்சிலர் அய்யப்பன், மூத்த
உறுப்பினர் கந்தவேல், நகர நிர்வாகிகள் ராஜாராம், பியூட்டி.நவாஸ்கான், ஆறுமுகம், பாலு, மலர்வன்னன், இளைஞர் அணி தீன்முகம்மது உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
படம் செய்தி:
நிருபர் : மு.முகைதீன்பிச்சை
முத்துப்பேட்டை