சவூதி அரேபியா ஏஜண்டால் ஏமாற்றப் பட்ட இந்திய தொழிலாளர்கள்.!
Posted January 31, 2015 by Adiraivanavil in Labels: வெளிநாடுசெய்தி
விசாவை, நிரந்தர வேலை விசா என்று கூறி ஏமாற்றி உள்ளார்கள். அதனை நம்பி ஏஜண்ட்டிற்கு ஒரு லட்சம் ரூபாய் பணம் கொடுத்து சவூதி அரேபியா வந்த 24இந்தியரகள், மூன்று மாதங்களில் விசா காலாவதி ஆகிவிட்ட நிலையில் அல்-கோபர் பயொனி என்னும இடத்தில் ஒரு சிறிய அறைக்குள் அடை பட்டுக் கிடக்கின்றார்கள். வீடு, வயல், நகைகளை அடகு வைத்து, ஏஜண்ட பணம் கட்டி பல வித நோக்கங்களுக்காக இங்கு வந்தவர்கள், அவைகள் கனவாகிப் போன நிலையில் உணவிற்குக் கூட பணமின்றி விடப் பட்டுள்ளார்கள். தற்போது சில சமூக உதவியாளர்களும், இந்திய தூதரகமும் உதவுகின்றன. ஒவ்வொரு தொழிலாளியிடமும் ஒரு சோகமான கண்ணீர்க் கதை உள்ளது. இவர்கள் இங்கே பணம் கொட்டிக் கிடக்கிறது அள்ளிக் கொண்டு போகலாம் என வந்தவர்கள் அல்ல. பணத்தைக் கொட்டிக் கொடுத்து, தங்களது குடும்பத்தின் வயிற்றுப் பிழைப்புக்காக உழைத்து சம்பளத்தை நம்பி வந்தவர்கள்.
தி. ரஹ்மத்துல்லா
0 comment(s) to... “சவூதி அரேபியா ஏஜண்டால் ஏமாற்றப் பட்ட இந்திய தொழிலாளர்கள்.!”