100 வயது மூதாட்டி மரணம். கண்கள் தானம் செய்தமூதாட்டி

Posted January 15, 2015 by Adiraivanavil in Labels:
 முத்துப்பேட்டை ஆஸ்பத்திரி தெருவில் வசிப்பவர் வடுவம்மாள் ஆட்சி. இவருக்கு 99 வயது முடிந்து இந்த ஆண்டு 100 வயதை தொடங்கியது. இவருக்கு மூன்று மகளும், கோவிந்தராஜ் என்ற மகனும் உள்ளனர். இவரது மகன் கோவிந்தராஜ். 
(பழைய பஸ்டாண்டில் லட்சமி சுவிட் ஸ்டால் வைத்துள்ளார்) நகர தி.மு.கவின் முன்னால் பொருளாளர். சமீபக்காலமாக நல்ல நிலையில் இருந்த வடுவம்மாள் ஆட்சிக்கு நேற்று முன்தினம் இரவு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவரது இரு கண்களையும் முத்துப்பேட்டை அரிமா சங்கம் மூலம் தானமாக பெறப்பட்டது. மறைந்த வடுவம்மாள் ஆட்சி உடலுக்கு தி.மு.க மாவட்ட துணைச் செயலாளரும், முன்னால் பேரூராட்சி தலைவருமான கார்த்திக் உட்பட தி.மு.கவினரும், அனைத்து கட்சி பிரமுகர்களும் அஞ்சலி செலுத்தினார்கள்


படம் செய்தி:

நிருபர் : மு.முகைதீன்பிச்சை 
முத்துப்பேட்டை


0 comment(s) to... “ 100 வயது மூதாட்டி மரணம். கண்கள் தானம் செய்தமூதாட்டி”