குளிரில் நடுங்கிய குழந்தையை மரணத்தில் இருந்து காப்பாற்றிய பூனை

Posted January 17, 2015 by Adiraivanavil in Labels:

ரஷ்யாவில் பெட்டி ஒன்றில் கவனிப்பாரின்றி குளிரில் நடுங்கியபடி கிடந்த குழந்தை ஒன்றை மரணத்தில் இருந்து காப்பாற்றி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது ஒரு பூனை.ரஷ்யாவின் ஓப்னின்ஸ்க் நகரில் மாஷா என்ற பெயர் கொண்ட அந்த பெண் பூனை உள்ளூர் மக்களால் பராமரிக்கப்பட்டு வந்துள்ளது.  அது மிக அமைதியானது.  நட்புடன் பழக கூடியது.  அங்கு குடியிருந்து வரும் ஐரீனா லேவ்ரோவா என்ற பெண்மணி இது குறித்து கூறுகையில், மாஷா கத்தினால் அதில் ஏதாவது விசயம் இருக்கும்.  அன்று அது கத்தியபோது, அதற்கு காயம் ஏற்பட்டதாகவே கருதினேன்.


வழக்கமாக என்னை பார்த்து ஹலோ சொல்லும்.  ஆனால் அன்றைய தினம் அது குழந்தை ஒன்றின் அருகில் பெட்டியில் படுத்து கிடந்தது.  அதனை பார்த்து எனக்கு ஏற்பட்ட அதிர்ச்சியை நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள் என கூறியுள்ளார்.

கடந்த வெள்ளி கிழமை நடந்த இந்த சம்பவத்தின்போது, அன்றைய வெப்ப நிலை நகரில் 30 டிகிரியாக இருந்துள்ளது.  மாஷா அந்த குழந்தைக்கு வெப்பமான சூழலை ஏற்படுத்தி கொடுத்துள்ளதுடன் அங்கு நடந்து சென்றவர்களை கவரும் வகையில் மியாவ் என்ற தனது செல்ல குரலை எழுப்பியுள்ளது.

இதனை அடுத்து சில மணிநேரங்களே வெளியே கிடந்த அந்த குழந்தை உடனடியாக கவனிக்கப்பட்டு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டு காப்பாற்றப்பட்டு உள்ளது.  இதனால் மாஷா அந்நகரின் ஹீரோவாக மாறியுள்ளது.

அந்த குழந்தைக்கு உணவு மற்றும் பொம்மைகள் என ஆதரவு கரம் நீண்டு உள்ளது.  இந்த குழந்தையை கண்டதால் தனது தாய் பாசத்தை மாஷா வெளிப்படுத்தி உள்ளதாக லேவ்ரோவா கூறியுள்ளார்.


நன்றி தினத்தந்தி


0 comment(s) to... “குளிரில் நடுங்கிய குழந்தையை மரணத்தில் இருந்து காப்பாற்றிய பூனை”