முத்துப்பேட்டை அடுத்த கோவிலூர் கிராமத்தை சேர்ந்த சிவபிரகாசம் மனைவி கஸ்தூரி(55) நேற்று அதிகாலை கோவில் அருகே உள்ள குளத்தில் குளித்துவிட்டு வீடு திருபிக்கொண்திருந்தார். அப்பொழுது இரு மர்ம இளைஞர்கள் அருகில் உள்ள மின்கம்பத்தின் விளக்கை அனைத்து விட்டு கஸ்தூரி கழுத்தில் கிடந்த தங்க தாலி செயினை பறித்துக்கொண்டு பைக்கில் தப்ப முயசித்தனர். சுதாரித்த கஸ்தூரி விடாமல் அந்த இளைஞரை பிடித்து மல்லுக்கட்டி உள்ளார.; இதனால் போராடி பார்த்த அந்த இளைஞர்கள் செயினை வீசிவிட்டு பைக்கில் ஏறி தப்பி ஓடிவிட்டனர். இதுக்குறித்து முத்துப்பேட்டை காவல் நிலையத்தில்
கஸ்தூரி புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். பின்னர் கஸ்தூரி மற்றும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறிய அடையாளத்தின் அடிப்படையில் அதேபகுதியை சேர்ந்த சோமசுந்தரம் மகன் சபரிவாசன்(25)என்பது தெரிய வந்தது. உடன் போலீசார் சபரிவாசனை பிடித்து கைது செய்தனர். இதற்கு உடந்தையாக இருந்த மற்றொரு இளைஞரை தேடிவருகின்றனர். இச் சம்பவம் முத்துப்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
செய்தி:
நிருபர் : மு.முகைதீன்பிச்சை
முத்துப்பேட்டை