முத்துப்பேட்டை அருகே பல வருடங்களாக வீணாகும் குடிநீர்.

Posted January 14, 2015 by Adiraivanavil in Labels:
 முத்துப்பேட்டை அடுத்த மேலநம்மங்குறிச்சி கிராமத்தில் அம்பேத்கர் தெரு, சீனிவாசன் தெரு பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இவர்களுக்காக அம்பேத்கர் தெருவில் குடிநீர் மேல்நிலை தேக்கத்தொட்டி ஒன்று உள்ளது. இங்கிருந்துதான் இப்பகுதிக்கு தினமும் காலை, மாலை இரு நேரங்களில் குடிநீர் விநியாகம் செய்யப்படுகிறது. அதன் அருகே இதனை இயக்கும் மின் மோட்டார் கட்டிடமும் உள்ளது. இந்த நிலையில்
பூமிக்கு அடியிலிருந்து எடுக்கப்படும் குடிநீரை மேல்நிலை தேக்கத் தொட்டியில் கொண்டு செல்லும் குழாய்களில் பூமிக்கடியிலும் மேல் புறத்திலும் ஆங்காங்கே சேதமாகி உள்ளதால் அதில் கசிவு ஏற்பட்டு எடுக்கப்படும் குடிநீர் வீணாகி வாய்க்காலில் செல்கிறது. பாதி அளவு வீணாகி செல்லும் இந்த குடிநீர் மக்களுக்கு பயன்படாமல் அப்பகுதியில் செல்லும் கழிவு நீர்;வாய்க்காலில் வடிகிறது. இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் வீணாகும் குடிநீர்; பைப்பை சரி செய்ய முன்வரவில்லை. தற்பொழுது தமிழக்ததில் குடிநீர்; தட்டுப்பாடு பெரும் அளவில் பல பகுதிகளில் ஏற்பட்டுள்ள இந்த நிலையில் இப்பகுதியில் வீணாகும் குடிநீரை தடுக்க தமிழ்நாடு குடிநீர் வடிக்கால் வாரியமும் கண்டுக் கொள்ளவில்லை. இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த ரமேஷ் கூறுகையில்: பல வருடமாக குடிநீர்; குழாயில் சேதமாகி குடிநீர்; வீணாகி வருகிறது. இதனை ஊராட்சி நி;ர்வாகமும், குடிநீர் வாரியமும் கண்டுக்கொள்ளவில்லை என்றார். இது குறித்து விடுதலை சிறுத்தை கட்சி ஒன்றிய செயலாளர் மீனாட்சி சுந்தரம் கூறுகையில்: குடிநீர் ஒவ்வொரு துளியும் மக்களில் உயிர் நீராகும். தற்பொழுது இந்த குடிநீர் தேவையில்லாமல் வீணாகி வருகிறது. அடிக்கடி இதில் பொருத்தப்பட்ட மின் மோட்டாரை பழுது நீக்குவதாக கூறி செலவு கணக்கு எழுதும் ஊராட்சி நிர்வாகம், குடிநீர் வீணாகுவற்கு காரணமான குழாய்களை ஏன் சரி செய்ய முன்வரவில்லை? இதனை குடிநீர் வடிக்கால் வாரியம் உடனடியாக நடவடிக்கை எடுத்து வீனாகும் குடிநீரை தடுக்க வேண்டும் என்றார்.

படம் செய்தி: 
நிருபர் : மு.முகைதீன்பிச்சை 
முத்துப்பேட்டை






0 comment(s) to... “முத்துப்பேட்டை அருகே பல வருடங்களாக வீணாகும் குடிநீர்.”