அதிரையில் காவல்துறையினர் நடத்திய விழிப்புணார்வு பேரணி (படங்கள் இனைப்பு)

Posted January 11, 2015 by Adiraivanavil in Labels:
 அதிராம்பட்டினத்தில்  தொடரும் சாலை விபத்துக்களை கருத்தில் கொண்டும் வாகன ட்டுனர்கள்  சாலை விதிகளை மதிக்க வேண்டும் என அதிராம்பட்டினம் காவல் துறையினர் இன்று மாலை அதிராம்பட்டினத்தில் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.

இதில் காவல் துறையினர், ஆட்டோ ஓட்டுனர்கள் சமுக ஆர்வலர்கள், பொதுமக்கள்
என பலர் கலந்துக்கொண்டனர்.


சாலை விபத்துக்களை தவிர்ப்பது எப்படி ? இதற்கு(விபத்துக்கு நடப்பதற்கு) என்ன காரணம் ……


இதற்க்கு என்ன காரணம் ……?


சாலை விபத்து என்பது தினமும் நாம் தினசரி காலை மட்றும் மாலை பத்திரிக்கைகளில் அதிகமாக படிக்கும் ஒரு சம்பவமாக இருந்துவருகிறது . இந்த சாலை விபத்துக்களில் காயமடைவதும் ,படுகாயமடைவதும் ,இன்னும் சில சமயங்களில் மரணங்கள் கூட ஏற்படுகிறது .இதற்க்கு என்ன காரணம்?
தலை கவசம் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுவது.
அதிவேகமாக வாகனம் ஓட்டுவது.
மிகநீண்ட தூரம்  தொடர்சியாக வாகனம் ஓட்டுவது.
பேருந்து ஓட்டுனர்கள் ஓய்வு இல்லாமல் தொடர்சியாக வாகனம் ஓட்டுவது.
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது .
வாகனம் ஓட்டும் போது செல்போன் பேசிக்கொண்டே செல்வது .
விளையாட்டாக பேசிக்கொண்டே வாகனங்களை முந்திசெல்வது .
உடல்நிலை சரியல்லதா பொழுது வாகனம் ஒட்டிசெல்வது .

விழிப்புணர்வு தகவல்கள் .

சகோதரர்களே ! நண்பர்களே !

இருசக்கர வாகனம் ஓட்டும்போது கண்டிப்பாக தலை கவசம் அணிந்துகொள்ளுங்கள் 

.மித வேகம் மிக நன்று

 என்பதை மனதில் கொண்டு மெதுவாக பயணம் செய்யுங்கள் .தொடர்சியாக நீண்ட தூரம் வாகனம் ஒட்டி பயணம் செய்வதை தவிருங்கள் .
நீங்கள் பயணம் செய்யும் பேருந்து வாகன ஓட்டுனர் ஓய்வு இல்லாமல் தொடர்சியாக வாகனம் ஓட்ட அனுமதிக்காதீர்கள் .வாகனம் ஓட்டும் போது கண்டிப்பாக செல்போன் பேசுவதை கண்டிப்பாக தவிர்த்துவிடுங்கள் .தவிர்க்கமுடியாத சமயங்களில் வாகனத்தை நிறுத்திவிட்டு பேசுங்கள் .பின்னர் உங்கள் பயணத்தை தொடருங்கள் .
நீங்கள் பயணம் செய்யும் பேருந்து வாகன ஓட்டுனர் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்ட அனுமதிக்காதீர்கள். இருசக்கர வாகனத்தில் பயணம் செய்யும்போது விளையாட்டாக பேசிக்கொண்டே போகாதீர்கள்.
சில சமயம் நாம் சரியாக சென்றாலும் எதிரே வரும் வாகனங்கள் மிக வேகமாகவும் , தவறான வழியில்  வரலாம் .எனவே எதிரே வரும் வாகனத்தின் நிலைமைக்கேற்ப நம்முடைய வாகனம் சரியாக செல்கிறதா என்பதை கவனித்து உங்கள் பயணத்தை தொடருங்கள் .
சகோதரர்களே ! நண்பர்களே !
இங்கு நாங்கள் குறிப்பிடுள்ளவைகள் அனைவரின் பாதுகாப்பான பயணத்திற்கும்,விளிப்புனர்வுக்க்காகவுமே !பயணத்தில்  மித வேகத்துடனும் ,பாதுகாப்புடனும் செல்லுமாறு  அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம் .உங்களுடைய பயணங்கள் இனிமையானதாக எங்களுடைய வாழ்த்துக்கள் .

படங்கள் காளிதாஸ்











0 comment(s) to... “அதிரையில் காவல்துறையினர் நடத்திய விழிப்புணார்வு பேரணி (படங்கள் இனைப்பு)”