அதிரை அருகே விநாயகர் கோயிலில் கலசம் திருடிய வழக்கில் 4 பேரிடம் விசாரணை

Posted January 30, 2015 by Adiraivanavil in Labels:

அதிராம்பட்டினத்தில் உள்ள விநாயகர் கோயிலில் கலசம் திருடிய வழக்கில் 4 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.அதிராம்பட்டினம் அடுத்த சுந்தரநாயகிபுரத்தில் வெள்ளை விநாயகர் கோயில் உள்ளது. இங்கு கடந்த 26ம் தேதி இரவு கோபுரத்தில் உள்ள ஒரு கலசத்தை மர்மநபர்கள் பெயர்த்து திருடியுள்ளனர். இதுகுறித்து அதிராம்பட்டினம் போலீசில் பாலசுப்பிரமணியன் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், எஸ்ஐக்கள் பசுபதி, கலைச்செல்வன் ஆகியோர் வழக்குப்பதிந்து 4 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.


0 comment(s) to... “அதிரை அருகே விநாயகர் கோயிலில் கலசம் திருடிய வழக்கில் 4 பேரிடம் விசாரணை”