லாரல் சீனியர் செகண்டரி பள்ளி சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி-500 மாணவர்கள் பங்கேற்பு

Posted January 24, 2015 by Adiraivanavil in Labels:

அதிராம்பட்டினத்தை அடுத்த பள்ளிகொண்டான் லாரல் 

சீனியர் செகண்டரி சிபிஎஸ்இ பள்ளி மாணவ, மாணவிகள் 26வது சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தினர். பேரணி தொடக்க விழா நிகழ்ச்சிக்கு லாரல் சிபிஎஸ்இ பள்ளி தாளாளர் சந்திரசேகரன், லாரல் மேல்நிலைப்பள்ளி தாளாளர் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர். பேரணியை லாரல் சிபிஎஸ்இ பள்ளி முதல்வர் சத்தியவதி நரசிங்கராவ் கொடியசைத்து துவக்கி வைத்தார். பட்டுக்கோட் டை பயணியர்
மாளிகையி லிருந்து புறப்பட்ட பேரணி, ரயில்வே ஸ்டேஷன் சாலை, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சாலை, மைனர் பங் களா, சின் னையா தெரு, மணிக்கூண்டு, பழனியப்பன் தெரு, பேருந்து நிலையம் வழியாக வந்து ரயில்வே ஸ்டேஷன் அருகில் முடிவடைந்தது.
பேரணியில் லாரல் சிபிஎஸ்இ பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், போக்குவரத்து பிரிவு எஸ்ஐ அபுல்தல்ஹா கலந்து கொண்ட னர். பேரணியில் பங்கேற்ற மாணவர்கள், சாலை பாது காப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு வாசகங்கள் அடங் கிய விளம்பர பதாகைகளை ஏந்தி சென்றனர்.


0 comment(s) to... “லாரல் சீனியர் செகண்டரி பள்ளி சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி-500 மாணவர்கள் பங்கேற்பு”