அதிரையில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கொடும்பாவியை எரிப்பு-முதல்வர் பற்றி அவதூறு பேச்சு:

Posted August 18, 2015 by Adiraivanavil in Labels:
முதல்வர் ஜெயலலிதா பற்றி அவதூறாக பேசியதாக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கொடும்பாவியை எரித்து தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கடந்தவாரம் சென்னை வந்த பிரதமர் மோடி, முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேசியிருந்ததார். இதை விமர்சித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேட்டியளித்தார். இதை கண்டித்து,அதிராம்பட்டினம் பஸ்நிலையம் அருகில்அ.தி.மு.க.வினர் திரண்டு வந்து ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உருவ பொம்மையை சாலையில் போட்டு எரித்தனர். மேலும், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் முதல்வரை பற்றி பேச அறுகதை இல்லை என்றும் அ.தி.மு.க.வினர் கோஷங்களை எழுப்பினர்.  இந்த சம்பவத்தால் அங்கு பரப்பரப்பு காணப்பட்டது இதில்   நகர செயலாளர் பிச்சை  வீரகணேச சேதுராமன்தஞ்சை மாவட்ட அ.தி.மு.க சிறுபாண்மையினர் அணியின் மாவட்ட செயலாளர் அப்துல் அஜீஸ்நகர துணை செயலாளர் தமீம் எம்.ஜீ.ஆர் இளைஞர் அணி செயலாளர் சிவகுமார் அதிரை நகர நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர் 

படங்கள் செய்திகள் தினேஷ்










0 comment(s) to... “அதிரையில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கொடும்பாவியை எரிப்பு-முதல்வர் பற்றி அவதூறு பேச்சு: ”