நமது நாடு சுதந்திரம் அடைந்து 68 ஆண்டுகள் நிறைவுற்று 69 வது ஆண்டு துவக்க விழாவை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது இதில் தேசியக்கொடியை பேருராட்சி மன்ற தலைவர் அஸ்லம் அவர்கள் ஏற்றி வைத்தார் இந்நிகழ்ச்சியில்
அதிராம்பட்டினம் அனைத்து பகுதி தலைவர்களும் ஜமாத்தார்கள் கலந்து கொண்டனர் அவர்களை கௌரவித்து பேருராட்சி சார்பில் பொன்னாடை போர்த்தப்பட்டது இந்நிகழ்வில் பிளாஸ்டிக் ஒழிப்பிற்கான உறுதிமொழி ஏற்கப்பட்டது உறுதிமொழியை பேருராட்சி தலைவர் வாசிக்க விழாவிற்கு வந்தவர்கள் அவர் கூறியதை திரும்பக்கூறி உறுதிமொழியை ஏற்றனர் இவ்விழாவின் இறுதியில் இனிப்புகள் வழங்கப்பட்டது.